siruppiddy

வெள்ளி, 22 ஜூலை, 2022

நினைவஞ்சலி 25ம் ஆண்டு அமரர் விநாகமூர்த்தி ஆனந்தராஜா 19.07.22


யாழ் நவக்கிரி புத்தூரைப்பிறப்பிடமாகவும் வதிவிடமாககொண்ட    
அமரர்  வினயகமூர்த்தி  ஆனந்தராஜாவின்.  இருபத்தைந்தாம் (25ம் ) ஆண்டு நினைவஞ்சலி
.19.07.2022..இன்று தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில்களமாடி வீரச்சாவடைந்த வீரவேங்கை  அமரர்  வினயகமூர்த்தி  ஆனந்தராஜா அன்னாரின்.ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவிகின்றோம் 
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
இங்குஅழுத்தவும் தேசியத்தமிழ்.இணையச்செய்திகள் >>>






வெள்ளி, 26 நவம்பர், 2021

விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்தநாளை யாழ். பல்கலையில் கேக் வெட்டி கொண்டாடட்டம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள்  26-11-2021.இன்று 
கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 67ஆவது பிறந்தநாள் இன்றாகும். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் மாணவர்கள் அவரது உருவ படத்திற்கு முன்பாக கேக் வெட்டி பிறந்தநாளை 
கொண்டாடியுள்ளனர்.
அதேவேளை மாவீரர் வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்.பல்கலைகழக சூழல் உள்ளிட்ட பகுதிகளில் ஆயுதங்களுடன் இராணுவத்தினர் , பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் , புலனாய்வாளர்களின் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ். பல்கலைக்கழகத்தினுள் மாணவர்கள் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இனியபிறந்தநாள்வாழ்த்துக்கள் 

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>





சனி, 22 அக்டோபர், 2016

ஒரு சர்வதேச விமான நிலையம் தமிழீழத்தில்!!!

தமிழனின் கனவு……..!
இதற்காக எத்தனை வருடங்கள் போராடினோம் எத்தனை உயிர்களை பலி கொடுத்தோம் என்றோ ஒரு நாள் நினைத்ததை உருவாக்கி காட்டுவோம். இல்லையேல் அதுக்காக உயிரை விடுவோம்…!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.




திங்கள், 25 ஜூலை, 2016

தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உறுதியாகச் சொல்கிறார்கள்

புலிகளின் ஊடகத் துறை – தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற பெயரில் இணையதளம் திடீரென உதயமாகி இருக்கிறது. ‘இனி புலிகளின் அதிகாரபூர்வ இணையதளம் இதுதான்’ எனவும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாறு ஜுனியர் விகடன் வார இதழ் வெளியிட்டுள்ள முகப்பு செய்தியில் தெரிவித்துள்ளது.
இச் செய்தி முன்னர் பிரசுரமாகி இருந்தாலும் தற்போது முகநுாலில் இந்தச் செய்தி மீண்டும் தீயாக பரவுகிறது….
இது குறித்து நம்பகமான புலி ஆதரவாளர்கள் சிலர், ”அது புலிகளின் இணைய தளமேதான். இது நாள் வரை தேசிய தலைவர் பிரபாகரன் குறித்து புலிகள் தரப்பு
கருத்து சொல்லவே இல்லை. கே.பி-யை வளைத்த உளவு அமைப்புகள்தான் புலிகளின் கருத்தாக ஏதேதோ பரப்பிக் கொண்டிருந்தன. ஆனால், இனி புலிகளின் அனைத்து அறிவிப்புகளும் இந்த இணையதளத்தில்தான் இடம்பெறப் போகின்றன!” என்று அடித்துச் சொல்கிறார்கள்.”இந்த புதிய இணைய தளத்தின் செய்தித் தொடர்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ச.தமிழ்மாறனைப் பற்றி புலிகளின் தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் தெரியும்.
ச.தமிழ்மாறன் என்பது அவருடைய இயற்பெயர் அல்ல. சிங்கள அரசின் சதி வலையில் சிக்கி விடாதபடி இருப்பதற்காகவே புலிகளின் தலைமையக உத்தரவுப்படி ச.தமிழ்மாறன் என்ற பெயரில் அவர் இயங்கத் தொடங்கி இருக்கிறார். 45 வயதான அவர் அந்த இணைய தளத்தின் வாயிலாகவே விரைவில் தன் முகத்தைக் காட்டவிருக்கிறார். அப்போது புலிகளின் சர்வதேசத் தொடர்பு கள் அனைத்தும் ஊடகத் துறையின் இணையதளம் ஊடாக இணையும்.
இதோடு விரைவிலேயே புலிகளின் மாவீரர் பணிமனை, மக்கள் தொடர்பகம் உள்ளிட்டவையும் இயங்கத் தொடங்கும். மாவீரர் பணிமனையில் ஈழப் போரில் உயிர்விட்ட தளபதிகள், தியாகப் போராளிகளின் பெயர்ப் பட்டியல் விரைவிலேயே வெளியிடப்படும். மக்கள் தொடர்பகம் மூலமாக சர்வதேச தமிழ் தொடர்புகள் மேம்படுத்தப்படும். ஏற்கெனவே இயங்கி வந்த தமிழீழ மாணவர் அமைப்பு மறுபடியும் தொடங்கப் படவிருக்கிறது…” எனச் சொன்னார்கள், புலிகளின் தொடர்பில் இன்றைக்கும் இருக்கும் அந்த நண்பர்கள்.
அவர்களின் துணையுடனேயே நாம் ‘ச.தமிழ்மாற’னிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
”புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உறுதியாகச் சொல்கிறீர்கள். ஆனால், சிங்கள ராணுவம் அவர் கொல்லப்பட்டு விட்டதாக இந்தியாவுக்கு சான்றிதழே கொடுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறதே…?”
”தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறார். பல தடவை இப்படியான நாடகத்தை இலங்கை அரசு நடத்தியதும், அதன் பின்னர் அதன் முகத்திரை கிழிவதும் வழக்கமான ஒன்றுதான். இப்போதும் அப்படித்தான் நடந்திருக்கிறது. இறப்புச் சான்றிதழ் என்பதும் ஒரு திட்டமிட்ட நாடகமே!”
”கடைசிக் கட்டப் போரில் இருந்து பிரபாகரன் எப்படித் தப்பினார்?”
”இலங்கை அரசுடனான இறுதிக்கட்டப் போரில் தேசியத் தலைவர் நேரடிச் சமரில் ஈடுபட்டார். இலங்கை அரசின் கடும் சுற்றி வளைப்பில் நாம் போர் யுக்தியினையும் தந்திரோ பாயத்தையும் பயன்படுத்தி தலைவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றோம். இதில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட கரும்புலிகள் வீரச் சாவைத் தழுவிக் கொண்டனர். முக்கியத் தளபதிகள் சகிதம் தலைவர் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது பயன்படுத்திய தந்திரோபாயத்தையும் போர் யுக்தியையும் இன்றைய சூழலில் சொல்வது சிறப்பாக இருக்காது.”
”அப்படியென்றால் சிங்கள ராணுவம் பிரபாகரனின் உடலாகக் காட்டியது எது?”
”சிதைக்கப்பட்ட தலைவரை ஒத்த அந்த உருவம் பற்றி ராஜபக்ஷே அல்லது சரத் ஃபொன்சேகாவிடம்தான் கேட்க வேண்டும். ஏனென்றால், அந்த அதீத மருத்துவ தொழில் நுட்பம் பற்றி அவர்களுக்குத்தானே தெரியும்.”
”வலுவான ஆதாரங்கள் ஏதும் இல்லாததால்தான் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக சொல்லப்படும் கருத்து சிலரால் விமர்சிக்கப்படுகிறது. உரிய ஆதாரங்களை நீங்கள் சமர்ப்பிக்கலாமே?”
”தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. இருப்பினும் இன்றைய சூழலில் அவற்றை வெளியிடுவது பொருத்தமானதாக இருக்காது. சாலச் சிறந்த ஆதாரமாக வெகு விரைவிலேயே தேசியத் தலைவர் உலகத் தமிழர்கள் முன் தோன்றுவார்!”
”அவருடைய கருத்தாக ஏதும் வெளிவருமா? இல்லை… அவரே நேரடியாக வெளியே வந்து பேசுவாரா?”
”மாவீரர் தினம் மற்றும் சிறப்பு நேர்காணல்களில் தேசியத் தலைவர் எப்படித் தோன்றுவாரோ… அப்படியேதான் தோன்றுவார்!”
”ஈழப் போரில் கடைசிக் கட்ட நிலைமைகள் எப்படி இருந்தன? இறுதியில் ஆயுதங்களை மௌனிக்க வேண்டிய நிலைக்கு புலிகள் எப்படித் தள்ளப்பட்டார்கள்?”
”ஒரே நாளில் 25 ஆயிரம் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டதே இலங்கை அரசு போரை எவ்வளவு கொடூரமாக நடத்தியது என்பதற்கு சாட்சி. எமது மக்களை இலங்கை ராணுவம் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டது. அதனால்தான் பதில் தாக்குதலை தவிர்த்து, தலைவரின் உத்தரவின் கீழ் நாம் மௌனமானோம்.”
”புலிகளுக்கு ஆதரவாகக் காட்டிக் கொண்டு இன்றைய நிலையில் பல்வேறு இணைய தளங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. நீங்கள்தான் அதிகாரபூர்வ இணையதளம் என்பதை எப்படி நம்புவது?”
”குழப்புகின்ற இணைய தளங்களும், குழப்புகின்றவர்களும் இருக்கிறார்கள் என்பது எமக்கும் தெரியும். இவற்றை எல்லாம் தாண்டி எமது தலைவரின் வழிகாட்டுதலுடன் இயங்கும் விடுதலைப் புலிகளை எமது மக்கள் சரியாக இனம்கண்டு கொள்வார்கள். எது நிஜம் என்பது அவர்களுக்குத் தெரியும்!”
”புலிகளின் உளவுத் துறை தலைவர் பொட்டு அம்மான் கொல்லப்பட்டதாக சொல்லப்படுவது குறித்து..?”
”தேசியத் தலைவர் பாதுகாப்பாக உள்ளார் என்ற பதிலே இதற்கும் பொருந்தும்!”
”பிரபாகரனின் குடும்பத்தினர் முற்றாக அழிக்கப் பட்டு விட்டதாகச் சொல்லும் சிங்களத் தரப்பு, அதற்கு ஆதாரமாக பாலச்சந்திரன், துவாரகா போன்றோரை ஒத்த படங்களை வெளியிட்டி ருக்கிறதே?”
”தேசியத் தலைவரின் மகன் சார்ல்ஸ் ஆண்டனி களத்தில் வீரச்சாவு அடைந்தது உண்மை. தலைவரின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோர் பாதுகாப் பாகவே உள்ளனர்.”
”புலிகள் அடுத்த கட்டமாக எத்தகைய போராட்டத்தைக் கையிலெடுக்கப் போகிறார்கள்?”
”இது மக்கள் விடு தலைப் போராட்டம். எமது மக்கள் நலன் கருதித்தான் எங்க ளின் ஆயுதங்கள் மௌனமாகின. அமைதி வழியை விரும்பிய எம்மை சிங்கள அரசு தொடர்ந்து ஏமாற்றியே வந்தது. மீண்டும் எமது மக்களுக்கு சரியான தீர்வுத் திட்டத்தை சிங்கள அரசு முன்வைக்கா விட்டால், மக்கள் எழுச்சியுடன் எமது ஆயுதப் போராட்டம் தொடரும்!”
”கடைசிகட்டப் போரில் சர்வதேச சமாதானப் புள்ளிகளை நம்பி புலிகள் ஏமாந்து விட்டதாகச் சொல்லப்படுகிறதே… அது உண்மையா?”
”சர்வதேச உளவு வலையில் எமது சில முக்கிய உறுப்பினர்கள் வீழ்ந்தது உண்மைதான். அதனால் சில பாதிப்புகள் ஏற்பட்டதும் உண்மைதான். எமது போராட்ட வரலாற்றில் துரோகம் என்பது காலம் காலமாகவே நடந்துவரும் ஒன்றுதான். இவற்றையெல்லாம் தாண்டி எமது தேசியத் தலைவர் எமது போராட்டத்தை தொடர்ந்து வழி நடத்துகிறார்.”
”இலங்கையில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென புலிகள் விரும்புகிறார்கள்?”
”தேர்தல் குறித்து நாம் கருத்துக் கூற வேண்டிய அவசியம் இல்லை. சிங்களப் பேரினவாதம் பற்றி எமது மக்கள் தெளிவுடனேயே உள்ளார்கள்.”
”போரில் உண்டான தோல்வி, பிரபாகரனை எந்தளவுக்கு 
வருத்தி இருக்கிறது?”
”மக்களின் இழப்பும் போராளிகளின் இழப்பும் தேசியத் தலைவரை பெரும் துயரத்தில் ஆழ்த்தி யது. எமது மக்களின் கொடூர மரணங்கள் தலைவரின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. இவற்றையெல்லாம் தாண்டி எமது மக்கள் சுதந்திர தமிழீழத்தில் வாழ வேண்டும் என்பதில் தலைவர் உறுதியாகவே இருக்கிறார்.”
”தந்தை வேலுப்பிள்ளையின் மறைவின்போது பிரபாகரனின் மனநிலை எப்படி இருந்தது?”
”உறவுகளுக்கு அப்பாற்பட்டு எமது மக்களை நேசிப்பவர், எமது தேசியத் தலைவர் பிரபாகரன். இதுவே உங்களின் கேள்விக்கான பதில்!”
ஏன் இந்த இணைய அறிவிப்பு?
இலங்கைஅதிபர் தேர்தலில் ஃபொன்சேகா வுக்கே அதிக வெற்றி வாய்ப்பு தெரிவதாக உலகெங்கிலும் உள்ள கணிப்பாளர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இதைப் பார்த்து ராஜபக்ஷே புதியதொரு சிந்தனையில் ஆழ்ந்துவிட்டார்! போரின் வெற்றிதான் பிரதான பிரசாரப் பொருளாக இருப்பதால், போரின் அச்சத்தை மீண்டும் சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்க நினைக்கிறாராம் அவர்.
இதற்கென்றே சில சிங்களப் பகுதிகளைக் குறிவைத்து புலிகளின் பெயரால் தாக்குதல்களை அரங்கேற்ற ராஜபக்ஷே சகோதரர்கள் திட்டமிடுவதாக ஒரு செய்தி பரவியுள்ளது. முகாம்களில் தடுப்புச் சிறைகளில் வைக்கப்பட்டிருக்கும் புலிப் போராளிகள் மற்றும் சில தளபதிகளை கருணாவின் உதவியுடன் தங்கள் திட்டத்துக்கு சாதகமாகத் திருப்பவும் திட்டமாம்.
இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன் முகாம்களுக்கு வந்த கருணா, கிட்டத்தட்ட ஆயிரம் போராளிகளை முகாம்களிலிருந்து விடுவித்து தனியே அழைத்துச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தற்போது வெளியே விடப்பட்டிருக்கும் தளபதி ஒருவர் இந்தப் போராளிகளை வழிநடத்துவாராம். இவர்கள் பல அணிகளாகப் பிரிக்கப்பட்டு சிங்களப் பகுதிகளில் தாக்குதல் நடத்தப் பணிக்கப்பட்டிருக்கிறார்களாம். அதே வேளையில் இவர்களின் தாக்குதல்களினால் மக்களுக்கு உயிர்சேதம் ஏற்படாமல், பீதி மட்டும் ஏற்படும் வகையில் நாடகம் அரங்கேறுமாம்.
இதையெல்லாம் கருத்தில்கொண்டு இப்போதே சிங்கள ராணுவத்தின் பல்வேறு படையணிகளும் ஆங்காங்கே தயாராக உலவி வருகின்றன. ‘புலிகள் மீது எதிர் தாக்குதல். மிச்சம் மீதி இருந்த புலிகளை யும் ராணுவம் அழித்தது’ என்று செய்திகள் வெளியிடத் திட்டமாம்.
புலிகளுடனான போரில் முக்கியப் பங்கு வகித்த ராணுவத் தின் அவசரத் தாக்குதல் படையணி-1 மற்றும் 2 தற்போது அம்பிலிப்பிட்டி நகரிலுள்ள ஒரு தொழிற்சாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அதிசக்தி வாய்ந்த குண்டுகளை வீசி, இலக்கை நோக்கி தாக்குதல் நடத்தக்கூடிய இந்தப் படையணி சம்பந்தமில்லாமல் இந்தப் பிரதேசத்தில் நிறுத்தப்பட்டுள்ள காரணம் தெரியாமல், சிங்கள மக்களே குழம்பித்தான் வருகின் றனர்.
ஃபொன்சேகாவோ இதை எப்படியோ மோப்பம் பிடித்து, தனது தேர்தல் பிரசாரத்தினூடே இந்த சதித்திட்டத்தைப் பற்றி விளக்கிப் பேசியிருக்கிறார்!
சிங்கள மக்களுக்கு போர் பயத்தை ஏற்படுத்தி, அப்பாவி மக்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தியதாக அந்த இயக்கத்துக் கும் அவப் பெயர் ஏற்படுத்தி ஒரே கல்லில் ரெண்டு மாங் காய் அடிக்க அதிபர் தரப்பு முனைவது குறித்து நிஜமான புலிகளுக்கு தெரியவந்ததன் விளைவுதான், ‘பிரபாகரன் பத்திரமாக உள்ளார்’ என்று இணையதளம் மூலம் அவர்கள் சீறிக் கிளம்பியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
கடந்த மே மாதம் முதல் செயல்படாமல் இருந்த புலிகளின் மாவீரர் பணிமனை, ஆவணக்காப்பகம், தொடர் பகம் ஆகியவையும்இனி செயல்படத் தொடங்கும் என்றும் இந்த இணைய தளத் தில் அறிவித்திருக்கிறார்கள். இந்த அலுவலகங்கள் எங்கு செயல்படும், எப்படி செயல்படும் என்பது சம்பந்தப்பட்ட போராளிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் தெரியும். ராணுவத் துக்கு எதிராக மீண்டும் ஒரு தாக்குதலைத் தொடங்குவதற் கான புலிகளின் ஆரம்பகட்ட ஒன்றுகூடலுக்கான அழைப்பு தான் இது என்கிறார்கள்.
இன்னொரு பக்கம், இலங்கை அரசு மிரட்டலின் மூலமாக புலிகளின் நிதிப் பொறுப்பாளர்களை வளைத்து வருகிறது. அவர்களிடமிருக்கும் பெருமளவிலான பணத்தையும் மொத்தமாகக் கைப்பற்றி வருகிறது. கடந்த வாரம் கூட இதற்காக லண்டன் சென்ற ராஜபக்ஷேவின் புதல் வன் இளைஞர்களின் எதிர்காலம் அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷே, அங்குள்ள புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் எமில் காந்தனை சந்தித்திருக்கிறார். பிறகு அயர்லாந்து, கனடா, அமெரிக்காவைச் சேர்ந்த புலிகளின் நிதிப் பொறுப்பாளர்களையும் சந்தித்திருக்கிறார்.
தற்போது பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதோடு, இயக்கமும் செயல்படப் போகிறது என்பதை வெளிப்படையாக அறிவித்தால்தான் இந்த நிதி கொட்டும் முகவர்கள் எவருக்கும் பயப்படாமல் இயக்கத்தின் பக்கம் நிற்பார்கள் என்ற நோக் கமும்கூட இந்த இணையதள அறிவிப்புக்குப் பின்னால் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனியின் தாயார் ஏரம்பு சின்னம்மா. செட்டிகுளம் அகதி கள் முகாமில் இருந்து வந்த இவர், டிசம்பர். 1-ம் தேதி முகாம்களில் இருந்து மக்கள் மீள்குடியேறலாம் என்று அரசு அறிவித்ததும், முகாமிலிருந்து வெளியேறி மட்டக்களப்பு பகுதியில் வசித்து வந்தார். முகாமில் இருந்து வெளியே வந்த பிறகு பல்வேறு சிங்களப் புலனாய்வு அமைப்புகளும் இவரிடம் மதிவதனியின் இருப்பிடம் குறித்தும் இன்ன பிற தகவல்களை வேண்டியும் பல்வேறு அச்சுறுத்தல்களை நிகழ்த்தி வந்திருக்கிறார்கள். இதனால் இவர் 
மனமுடைந்திருந்த வேளையில் நடந்த விஷயங்களை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் கூறியிருந்திருக்கிறார். 
உடனே சிவாஜிலிங்கம்
 லண்டனில் இருந்த மதிவதனியின் அக்காவை தொடர்பு கொண்டு ஏரம்பு சின்னம்மாவை லண்டனுக்கு அனுப்பி வைப்பதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், வேறு சில காரணங்களுக்காக அவரை மாலத்தீவில் சிலரிடத்தில் கையளிக்கும்படி சிவாஜிலிங்கத்துக்கு வேண்டுகோள் வைக்கப்பட… கடந்த ஞாயிறன்று மாலத்தீவு சென்று அவரை ஒப்படைத்து விட்டு 
வந்திருக்கிறார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 15 மே, 2016

இந்த ஆண்டு மே 18 போர் வெற்றி அணிவகுப்பு இல்லை!

போர் வெற்றி அணிவகுப்பு இந்த ஆண்டு நடத்தப்படாது என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
“முப்பதாண்டுப் போர் நிறைவுக்கு வந்ததை முன்னிட்டு, வரும் மே 18ஆமு் நாள் போர் வீரர்கள் நாள் நிகழ்வுகள், நாடாளுமன்றத்துக்கு முன்பாக உள்ள ரணவிரு நினைவிடம் முன்பாக 
இடம்பெறும்.
இதில் சிறிலங்கா அதிபர், பிரதமர், அமைச்சர்கள் பங்கேற்பர். இந்த நிகழ்வுக்கு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவோ, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவோ அழைக்கப்படவில்லை.
போரில் இறந்த படையினரைக் கௌரவிக்கும் நிகழ்வு மாத்திரமே இம்முறை நடைபெறும். இந்த ஆண்டு போர் வெற்றி அணிவகுப்பு
 நடத்தப்படாது.
எதிர்வரும் காலங்களிலும், அதற்கு வாய்ப்பில்லை.போர் வெற்றி அணிவகுப்புகளுக்காக செலவிடப்படும் பணம், சேமிக்கப்பட்டு போர் வீரர்களின் குடும்பங்களின் நலனுக்காக செலவிடப்படும்.” என்றும் அவர் தெரிவித்தார்.
2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், ஆண்டு தோறும், மே 18ஆம் நாள் போர் வெற்றி விழா கொண்டாடப்பட்டு பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டு வந்தது.
ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், கடந்த ஆண்டிலும், இந்த இராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது.
இந்த போர் வெற்றி விழா கொண்டாட்டம், நல்லிணக்க முயற்சிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் என்ற பரவலான விமர்சனங்கள் எழுந்த நிலையிலேயே, சிறிலங்கா அரசாங்கம் இந்த ஆண்டு குறைந்தளவு முக்கியத்துவம் கொடுத்து இந்த நிகழ்வை நடத்த முடிவு 
செய்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

புதன், 29 ஜூலை, 2015

“பூ பூக்கள் எல்லாம்” இசைப்பிரியனின்..காணொளி

இன்று இசைத்துறையிலும் மிளிர்வு கொண்டுள்ளது 
எமது ஈழத்து சமுதாயம், என்பதை இந்த இளம் தலைமுறையிடம் கானலாம் எனபுது உறுதியாகியிள்ளது. அமைதியான
 இசையோட்டத்துடன் செல்லும் வரிகள் காதல் வரிகளாக இருந்தாலும் இசையின் அமைதியின் ஆழுமையும் குரலின் கனிவும் கூடி ரிங்காரம் கொள்ளும்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

நான்கு மாகாணசபை உறுப்பினர்கள் நீக்கம்!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊவா மாகாணசபையின் நான்கு உறுப்பினர்கள் .கூட்டமைப்பில் இருந்து கட்சியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, மாகாணசபை செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
ஊவா மாகாணசபையின் ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் இருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாற்றுவதற்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் நால்வரும் விலக்கப்பட்டுள்ளனர்.
அநுர விதானகமகே, வடிவேல் சுரேஸ், கித்சிறி சேனாரத் அத்தநாயக்க மற்றும் ஹரேந்திர தர்மதாஸ ஆகியோரே இந்த நால்வருமாவார்.
குறித்த நால்வரும் எதிர்க்கட்சி தலைவர் ஹரின் பெர்ணான்டோவுக்கு ஆதரவை வெளியிட்டதன் மூலம் ஊவா மாகாணசபை மூன்று மாதங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரத்துக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

www.nilavarai.com